திங்கள், 23 மார்ச், 2009

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா நீனழுத
கணணே ஒரங்கொரங்கு
கரத்தமணி கண்ணொரங்கு
பாலும் அடுப்புலியே
பாலர்களும் தொட்டிலிலே-நான்
பால எறக்குவனா-நான் வளர்த்த பாலர்கள தூக்குவனா
சோறும் அடுப்புலியே
சுந்தரர்கள் தொட்டிலிலே
சோத்த எறக்குவனா-நான் வளர்த்த
சுந்தரர தூக்குவனா?
தொட்டிலுண்டு மெத்தையுண்டு
தூசி படா வாசலுண்டு
தூசி படா வாசலிலே
தூக்கம் வரலியா-இந்த தூதுளங்கா காட்டுக்குள்ள
தூக்கம் வந்ததென்ன?

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

ஐயா! ஊர் ஞாபகம் வரும்போது உங்க வலைத்தளம் போயிட்டு வர்றேன்.
நன்றி
அன்புடன்
க.நா.சாந்தி லெக்ஷ்மணன்