செவ்வாய், 28 ஏப்ரல், 2009

விடுகதை

More than a Blog Aggregator1.சந்துல பொந்துல நீ வளந்த
சமுத்துரத்துல நான் பொறந்தன்
ரெண்டு பேர் எழுத்தும் ஒரே எழுத்து
2.கம்மாரம் கருப்பு சிதம்பரம் சிவப்பு
ஒடச்சா பருப்பு தின்னா கசப்பு
3.செக்க செவேர்னு இருப்பா செட்டியாரு மொவ
நாளை சந்தைக்கு வருவா வாத்தியாரு மொவ
4.மஞ்ச குளிச்சியிருக்கும் போது பார்க்க வந்திங்களா?
புள்ள பெத்து இருக்கும்போது புடுங்க வந்திங்களா?
5.காயும் கோணக்கா கொள்ளுடா மச்சான் கொள்ளு
வெடியும் வெடிச்சுட்டேன் சொல்லுடா மச்சான் சொல்லு
6.இந்திரரே சூரியரே மாமா
சந்திர மேகம் சாஞ்சி கெடக்கு பாரு
அவ கெடக்குரா ரவுடி
அறத்து கட்டுன சாதி
எட்டு கட்டு மேலேரி குத்துபட்ட சாதி
7.பூமியிலே பெண் பிறந்து பாவியானேன்
பிடித்தவர் கைக்கு அடங்கலானேன்
சாதியிலே சின்ன சாதியானேன்
சண்டைக்கு முன்பாக ஓடி வருவேன்
கோயில் குளமெல்லாம் சுற்றி வந்தும்
கொண்டைக்கு பூவற்ற பாவியானேன்
8.சாண்ட குடிச்ச மச்சான்
சத்தரத்த கட்டி வச்சான்
போக வர வழி வச்சான்
பொந்துக்குள்ள கைய வுட்டான்
வெளக்க அணைச்சான்
வேலைய ஆரம்பிச்சான்
9.லால் பேட்டைக்கும் மன்னார்குடிக்கும்
நடக்க கெட்டிகாரி
பால் இல்லாம புள்ள வளக்க
பலே கெட்டிகாரி
10.என்ன ஏண்டா அடிக்கிற
ஏஞ்சாண்ட குடிக்கிற.
விடைகள்: 1.கத்திரிக்காய், கருவாடு 2.குண்டுமணி 3.மிளகாய் 4.வேர்க்கடலை 5.கொள்ளு 6.நெல்லு 7.விளக்குமாறு 8.திரையரங்கு 9.கோழி 10.நாய்.