1.சந்துல பொந்துல நீ வளந்த
சமுத்தரத்துல நான் பொறந்தன்
ரெண்டுபேர் எழுத்தும்
ஒரே எழுத்து
2.சின்னகுட்டியும்
சின்ன பயலும்
சேந்து கட்டின தாலிய
சீரழிய சிறப்பழிய
சிக்கில்லாம எடுத்தவங்களுக்கு
சின்ன பட்டணம் பாதி
3.கம்மாரம் கருப்பு
சிதம்பரம் சிவப்பு
ஒடச்சா பருப்பு
தின்னா கசப்பு
4. செக்கச் செவேர்னு இருப்பா
செட்டியாரு மொவ
நாள சந்தைக்கு வருவா
வாத்தியாரு மொவ
5. எண்ணெயிலே பொறந்து
எண்ணெயிலே வளந்த
எண்ணெ செக்கான் மொவள
எள்ளுக்கும் சின்ன எல
என்ன எல?
விடை: 1.கத்திரிக்காயும் கருவாடும்,2.குருவிக்கூடு,3.குண்டுமணி(குன்றி மணி),4.மிளகாப்பழம்,5.விடத்தரமிலை