வெள்ளி, 27 மார்ச், 2009

நையாண்டிப்பாடல்


ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஒங்க அம்மாவும் செத்துபுட்டா வாடா
செத்தாலும் செத்தா போறா மயிலே- நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே!
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஒங்க அப்பனும் செத்துபுட்டான் வாடா
செத்தாலும் செத்தா போறான் மயிலே-நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஓம் பொண்டாட்டி செத்துபுட்டா வாடா
செத்தாலும் செத்தா போறா மயிலே -நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஓங்கூத்தியா செத்துபுட்டா வாடா
என்னண்ணு செத்துது ஏம்பவுனு
ஏதுன்னு செத்துது ஏம் பவுனு
வடக்குத்தி வாழஞ்சம்பா மயிலுக்கு
வடபுறமா எண்ண கிண்ணி குயிலுக்கு
தெக்குத்தி சீவஞ்சம்பா மயிலுக்கு
தென் புறமா எண்ண கிண்ணி குயிலுக்கு!
கொல்லன கூப்பிடுங்க மயிலுக்கு -ஒரு
குத்துக்கால் செப்பனிட மயிலுக்கு
தச்சன கூப்பிடுங்க மயிலுக்கு -ஒரு
தங்கக்கால் செப்பனிட குயிலுக்கு!
பச்ச முழிங்கி வெட்டி மயிலுக்கு
பக்குவமா பாடகட்ட குயிலுக்கு
வண்ணான கூப்பிடுங்க மயிலுக்கு
வர்ணமான சேல கட்ட குயிலுக்கு
பூவாண்டிய கூப்பிடுங்க மயிலுக்கு
பாட சுத்தி பூவுகட்ட குயிலுக்கு
பாத்து தகனம் பண்ண மயிலுக்கு
பக்குவமா தான் புதைக்க குயிலுக்கு!
-பூராசாமி படையாட்சி

1 கருத்து:

Mangai A சொன்னது…

very nice folk.the exact man's mentality is well depicted here.