செவ்வாய், 31 மார்ச், 2009

சம்பந்தப் பாட்டு

More than a Blog Aggregatorசம்பந்தப் பாட்டுகண்ணாலம் கண்ணாலம் கர்ணரோட கண்ணாலம் எப்ப எப்ப கண்ணாலம் நளையிம்பார் இண்ணையிம்பார் வெள்ளிக்கிழமையிம்பார் விடிய ரெண்டு நாழியிம்பார் கண்ணாலமின்னு சொல்லி காரேரி பாக்கு வச்சேன் பரவ மடி கோலி பாப்பாருக்கும் பாக்கு வச்சேன் செறுவ மடிகோலி செட்டியாருக்கும் பாக்கு வச்சேன். தெக்குத்தி யானைக்கும் தென்னெலைக்கும் சீட்டெழுதி தெக்குத்தி யானையும் தென்னெலையும் வந்தெறங்கும் வடக்குத்தி யானைக்கும் வாழெலைக்கும் சீட்டெழுதி வடக்குத்தி யானையும் வாழெலையும் வந்தெறங்கும். தங்கப் பொடி நுணுக்கி தண்ணி தொற கோலம் போட்டேன் வெள்ளி பொடி நுணுக்கி வெளி வாசல் கோலம் போட்டேன். பட்டு உடுத்தி நல்ல- எங்க புள்ள பவுனு நக மே போட்டு பந்தாட போன எடத்த பாத்து மடி புடிச்ச பழிகார பொண்ணரசே. நல்லெண்ண தேச்சு நயமா தல மொழுவி நல்லூரு ஏரிக்கு ஊஞ்சலுக்கு போகையிலே ஊஞ்சலுக்கு கீழிருந்து கெஞ்சுனது நீதானா பொன்னு முச்சி போட்டு என் ஆயர் பூமி விளையாடயிலே-அந்த பூமரத்து கீழிருந்து புலம்புனது நீதானா .................. செல்ல மகன பெத்தேன் மடிமேல செழிப்பான சம்பந்தம் போடன் கெடி மேல. - சின்னப்பிள்ளை

கருத்துகள் இல்லை: