உன்னைத்தொழுவேனே..
உன்னைத்தொழுவோர்க்கு என்னங்கடையாளம்
சங்கந்திருவாட்சி சாத்துந்தண்டமால
போத்தும் புலி தோலு
பிள்ளையாரை நோக்கி - நாங்க
என்னென்னா படைப்போம் - அவர்க்கு
வேருல பழுத்த வெள்ளரிக்கா நூறு
கோம்புல பழுத்த கொய்யாக்காயும் நூறு
ஆன அடிபோல - பிள்ளையார்க்கு
அப்பளங்கள் கோடி
குதர அடி போல கொழுக்கட்டையும் கோடி
ஓரேனேகல் வேலு
ஒருபதிகால் ஒன்னு ஒரு பதிகால் ரெண்டு
ஒரு பதிகால் மூனு ஒரு பதிகால் நாலு
ஓரங்கம் ஒரு நாள் - அது
சீரங்கம் திருநாள் - அந்த
சீரங்கத்து தேர - சாமி
சிங்காரிப்பார் யாரோ - அந்த
ஆசாரி வண்ணான்
அலங்கரிப்பார் தேரை - அந்த
நாட்டாரெல்லாம் கூடி
நடத்தி வைப்பார் தேரை - அந்த
ஊராரெல்லாம் கூடி
ஓட்டிவைப்பார் தேரை...
(தொடரும்)