புதன், 22 ஏப்ரல், 2015

நடவுப்பாடல்

More than a Blog Aggregator


நன்னே நன்னே நன்னே நன்னே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னானே நானே நன்னானே

ஆத்துல கரைக்கும் புளி
கோது புளிதானோ கொட்ட புளிதானோ
ஆத்தத் தாண் டி போன மன்னன்
அழச்சா வருவாரோ.... நன்னே...

கொளத்துல கரைக்கும் புளி
கோது புளிதானோ கொட்ட புளிதானோ
கொளத்தத் தாண் டி போன மன்னன்
கூப்பிட்டா வருவாரோ.... நன்னே...

அந்திசாய அந்திசாய
அலரியழுதேனே அலரியழுதேனே
அழகான  மடலு வாங்கி
போட்டனுப்புவேனோ நன்னே...

பொழுது சாய பொழுது சாய
பொலம்பியழுதேனே பொலம்பியழுதேனே
பொன்னான  மடலு வாங்கி
போட்டனுப்புவேனோ நன்னே...

பாடியவர் : அம்புஜம் , மருங்கூர்
நாள்    : 6.1.2000

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Visit : http://blogintamil.blogspot.in/2015/07/blog-post_21.html

தொடர்கிறேன்...