
செவ்வாய், 31 மார்ச், 2009
சம்பந்தப் பாட்டு

வெள்ளி, 27 மார்ச், 2009
நையாண்டிப்பாடல்

ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஒங்க அம்மாவும் செத்துபுட்டா வாடா
செத்தாலும் செத்தா போறா மயிலே- நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே!
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஒங்க அப்பனும் செத்துபுட்டான் வாடா
செத்தாலும் செத்தா போறான் மயிலே-நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஓம் பொண்டாட்டி செத்துபுட்டா வாடா
செத்தாலும் செத்தா போறா மயிலே -நான்
வல்லன்னு போய் சொல்லு குயிலே
ஓகோ ஓகோ செங்கரும்புக்காரா
ஓங்கூத்தியா செத்துபுட்டா வாடா
என்னண்ணு செத்துது ஏம்பவுனு
ஏதுன்னு செத்துது ஏம் பவுனு
வடக்குத்தி வாழஞ்சம்பா மயிலுக்கு
வடபுறமா எண்ண கிண்ணி குயிலுக்கு
தெக்குத்தி சீவஞ்சம்பா மயிலுக்கு
தென் புறமா எண்ண கிண்ணி குயிலுக்கு!
கொல்லன கூப்பிடுங்க மயிலுக்கு -ஒரு
குத்துக்கால் செப்பனிட மயிலுக்கு
தச்சன கூப்பிடுங்க மயிலுக்கு -ஒரு
தங்கக்கால் செப்பனிட குயிலுக்கு!
பச்ச முழிங்கி வெட்டி மயிலுக்கு
பக்குவமா பாடகட்ட குயிலுக்கு
வண்ணான கூப்பிடுங்க மயிலுக்கு
வர்ணமான சேல கட்ட குயிலுக்கு
பூவாண்டிய கூப்பிடுங்க மயிலுக்கு
பாட சுத்தி பூவுகட்ட குயிலுக்கு
பாத்து தகனம் பண்ண மயிலுக்கு
பக்குவமா தான் புதைக்க குயிலுக்கு!
-பூராசாமி படையாட்சி
வியாழன், 26 மார்ச், 2009
வயல் வெளிப் பாட்டு

உரலப்போல காலெறங்கி
காலெறங்கி பேஞ்ச மழ
காடு மேடெல்லாந்தண்ணி வர
வெள்ளான உழுது வர
வேடர் மக்க பில்லரிக்க
கருப்பான உழுது வர
கள்ளர் மக்க பில்லரிக்க
மோடு வெட்டி முள் பொறுக்கி
முத்துச்சோளம் தென வெதச்சி
காடு வெட்டி முள் பொறுக்கி
கம்மஞ்சோளம் தென வெதச்சி
சாச்சி சாச்சி வெதைக்கும் தென
சாக்கு தென மாளலையோ
ஓராந்தான் திங்களிலே
ஓரெலையாம் தின பயிரு
ஒரு பக்கம் முழிங்கி வெட்டி
ஒரு பக்கம் தட்டி கட்டி ...........
பத்தாந்தான் திங்களிலே
பஞ்சந்திங்க பதமாச்சிதே
-கல்யாணி
புதன், 25 மார்ச், 2009
சிறுவர் பாடல்கள்
மழ வருது மழ
வருதுநெல்லு அள்ளுங்க
முக்காப்படிஅரிசி போட்டுமுருக்கு சுடுங்க
ஏறு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க
சும்மா இருக்குற மாமனுக்குசூடு வய்யுங்க.
அத்தி பழம் விக்குதடி
தனக்கோடிஅண்ணங்கிட்ட சொல்லாதடி சின்னபாப்பா ஒன்னையும் என்னையும் வளத்தாங்கரோட்டுல
ஏண கட்டி போட்டாங்ககம்மங்கருது போல வளத்தாங்க-இந்தகமினேட்டி பயலுகிட்ட குடுத்தாங்கசோளப் பயிரு போல வளத்தாங்க-இந்தசோம்பேரி பயலுகிட்ட குடுத்தாங்க.
எண்ணெ இல்ல சீப்பில்லஊதாப்
பொடவ இல்லஉன்னக் கூட நா வல்ல
வடக்க குடுக்காதீங்கவாடிம்பான்
போடிம்பான்வல்லார ஓழிம்பான்என்ன
யாருக்கும் குடுக்காதீங்கஎன்ன பெத்த
அப்பாவுக்கே குடுத்துடுங்க.
வருதுநெல்லு அள்ளுங்க
முக்காப்படிஅரிசி போட்டுமுருக்கு சுடுங்க
ஏறு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க
சும்மா இருக்குற மாமனுக்குசூடு வய்யுங்க.
அத்தி பழம் விக்குதடி
தனக்கோடிஅண்ணங்கிட்ட சொல்லாதடி சின்னபாப்பா ஒன்னையும் என்னையும் வளத்தாங்கரோட்டுல
ஏண கட்டி போட்டாங்ககம்மங்கருது போல வளத்தாங்க-இந்தகமினேட்டி பயலுகிட்ட குடுத்தாங்கசோளப் பயிரு போல வளத்தாங்க-இந்தசோம்பேரி பயலுகிட்ட குடுத்தாங்க.
எண்ணெ இல்ல சீப்பில்லஊதாப்
பொடவ இல்லஉன்னக் கூட நா வல்ல
வடக்க குடுக்காதீங்கவாடிம்பான்
போடிம்பான்வல்லார ஓழிம்பான்என்ன
யாருக்கும் குடுக்காதீங்கஎன்ன பெத்த
அப்பாவுக்கே குடுத்துடுங்க.
திங்கள், 23 மார்ச், 2009
தாலாட்டு
ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா நீனழுத
கணணே ஒரங்கொரங்கு
கரத்தமணி கண்ணொரங்கு
பாலும் அடுப்புலியே
பாலர்களும் தொட்டிலிலே-நான்
பால எறக்குவனா-நான் வளர்த்த பாலர்கள தூக்குவனா
சோறும் அடுப்புலியே
சுந்தரர்கள் தொட்டிலிலே
சோத்த எறக்குவனா-நான் வளர்த்த
சுந்தரர தூக்குவனா?
தொட்டிலுண்டு மெத்தையுண்டு
தூசி படா வாசலுண்டு
தூசி படா வாசலிலே
தூக்கம் வரலியா-இந்த தூதுளங்கா காட்டுக்குள்ள
தூக்கம் வந்ததென்ன?
ஆரடிச்சா நீனழுத
கணணே ஒரங்கொரங்கு
கரத்தமணி கண்ணொரங்கு
பாலும் அடுப்புலியே
பாலர்களும் தொட்டிலிலே-நான்
பால எறக்குவனா-நான் வளர்த்த பாலர்கள தூக்குவனா
சோறும் அடுப்புலியே
சுந்தரர்கள் தொட்டிலிலே
சோத்த எறக்குவனா-நான் வளர்த்த
சுந்தரர தூக்குவனா?
தொட்டிலுண்டு மெத்தையுண்டு
தூசி படா வாசலுண்டு
தூசி படா வாசலிலே
தூக்கம் வரலியா-இந்த தூதுளங்கா காட்டுக்குள்ள
தூக்கம் வந்ததென்ன?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)