ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஐந்தாங்காய் பாட்டு

ஐந்தாங்காய் பாட்டு

புள்ளையார் உட்டுட்டேன்
பூவு பறிச்சுட்டேன்
பொட்டிக்குள்ள வச்சுட்டேன்
எங்கடி அக்கா மாம்பழம்

ஈரெட்ட ரெட்ட
எலுமிச்சந்தட்ட

பூ பூ புளியம்பூ
புட்டியில வச்ச தாழம்பூ
தாழம்பூவ ரெண்டாக்கி
தங்கச்சி கையில மூணாக்கி
அச்சச்சோ அடுப்புல
அவரக்கா வேவுல
மாமன் வரான் தோப்புல
மல்லிகப்பூ பூக்குல

பாடியவர் : செந்தமிழ்ச்செல்வி, வயது : 12 , ஊர் : தொரவளூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்.

சேகரிப்பு : இரத்தின புகழேந்தி, நாள் : 12.11. 2010

கருத்துகள் இல்லை: