வெள்ளி, 18 டிசம்பர், 2009

வயல்வெளிப் பாட்டு


ஊசி போல மப்பெறங்கி
உரல போல காலெறங்கி
காலெறங்கி பேஞ்ச மழ
காடு மேடெல்லந் தண்ணி வர

வெள்ளான உழுது வர
வேடர் மக்க பில்லரிக்க
கருப்பான உழுது வர
கள்ளர் மக்க பில்லரிக்க

மோடு வெட்டி முள் பொறுக்கி
முத்துச் சோளம் தென வெதைச்சி
காடு வெட்டி முள் பொறுக்கி
கம்மஞ்சோளம் தென வெதச்சி

சாச்சி சாச்சி வெதைக்கும் தென
சாக்கு தென மாளலியோ
கொட்டி கொட்டி வெதைக்கும் தென
கூட தென மாளலியா

ஓராந்தான் திங்களிலே
ஓரெலயாந் தின பயிரு
ஒரு கட்டு முழுங்கி வெட்டி
ஒரு பக்கம் தட்டி கட்டி.
............

பத்தாந்தான் திங்களிலே
பஞ்சந் திங்க பதமாச்சுதே.

தகவலாளர்: கல்யாணி, மருங்கூர்.
சேகரிப்பு: இரத்தின.புகழேந்தி.

1 கருத்து:

Unknown சொன்னது…

தமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...