வியாழன், 17 டிசம்பர், 2009

பாலூரணகரையில்

More than a Blog Aggregator
கார்கொடல் சொட்டவனம்
கார்மாங்குடிகளெல்லாம்
ஆறு போல வெள்ளம் வந்து
சேரு நெல்லு தள்ளி போவ
பட்டுசேல பொட்டி வண்டி
நெட்டி தள்ளி போவுது
வல்லியமுங் கீரனூரு
நல்ல மேலப்பாலூரு
பாலூரணகரையில்
வேண பொணம் போவுதடி
கெழக்க தொழூரானடி
கீழப்பால்ரு தேவங்குடி
குடியிருந்த கொடுமனூரு
தள்ளிபோனா மருங்கூரு
அக்கரையில் ஓட்டி மேடு
ஓட்டி மேடு பெருந்தொர
நாட்டினஞ் செறுவரப்பூரு
சின்ன ரெக்கணம் பெரிய ரெக்கணம்
தட்டானொட தம்மனூரு
மூணு லட்சம் காணி
சேதமாச்சி
சனம் பாவம்... பாவம்...

தகவலாளர்: ஆனந்தி,
சேகரித்தவர்: இரத்தின.புகழேந்தி.

குறிப்பு: மணிமுத்தாற்றுக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் அமைந்த அழகிய சிற்றூர் மருங்கூர். ஆறுகளில் வெள்ளம் வரும்போது ஆனந்தி பாட்டியின் இந்தப்பாடல் நினைவுக்கு வரும். 1993 ஆம் ஆண்டு சேகரித்த பாடல் இது.

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அரிய தொகுப்பு!

தொடர்க தங்கள் பணி!!

rathinapugazhendi சொன்னது…

நன்றி நண்பர்களே