folk song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
folk song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஏப்ரல், 2015

நடவுப்பாடல்

More than a Blog Aggregator


நன்னே நன்னே நன்னே நன்னே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னானே நானே நன்னானே

ஆத்துல கரைக்கும் புளி
கோது புளிதானோ கொட்ட புளிதானோ
ஆத்தத் தாண் டி போன மன்னன்
அழச்சா வருவாரோ.... நன்னே...

கொளத்துல கரைக்கும் புளி
கோது புளிதானோ கொட்ட புளிதானோ
கொளத்தத் தாண் டி போன மன்னன்
கூப்பிட்டா வருவாரோ.... நன்னே...

அந்திசாய அந்திசாய
அலரியழுதேனே அலரியழுதேனே
அழகான  மடலு வாங்கி
போட்டனுப்புவேனோ நன்னே...

பொழுது சாய பொழுது சாய
பொலம்பியழுதேனே பொலம்பியழுதேனே
பொன்னான  மடலு வாங்கி
போட்டனுப்புவேனோ நன்னே...

பாடியவர் : அம்புஜம் , மருங்கூர்
நாள்    : 6.1.2000

புதன், 15 ஏப்ரல், 2015

கும்மிப் பாடல்

More than a Blog Aggregator


காடுவெட்டி கல்பொறுக்கி
காக்கா சோளம் தினை வெரச்சி
மோடு வெட்டி முள்பொறுக்கி
முத்து சோளம் தின வெரச்சி

ஓராந்தான் திங்களிலே
ஓரெலையாந் தின பயிரு
ரெண்டாந்தான் திங்களிலே
ரெண்டெலையாந் தின பயிரு
............. .........................
..............   ......................
...................   ................
....................    ..................

பத்தாந்தான் திங்களிக்கு
பழுத்துவரும் தின பயிரு

.................  ..................
தேனும் தின மாவும்
தித்திக்குது வள்ளியாரே
தண்ணி தவிக்குதடி
தண்ணி கொஞ்சம் தாயேண்ணான்

பாடியவர்: திருமதி அம்புஜம், மருங்கூர்
நாள்: 24.10.1999

புதன், 23 மே, 2012

ஏரி..





ஏரியின்னா ஏலேலோ பெரிய ஏரி
இருகரையும் ஏலேலோ பொன்னேரி

பொன்னேரி ஏலேலோ கரைதனிலே
போட்டானாம் ஏலேலோ தூண்டிமுள்ளு

தூண்டியின்னா ஏலேலோ தொட பெருமாம்
துள்ளுவாள ஏலேலோ கை பொருமாம்

இடி இடிக்க ஏலேலோ மழபொழிய
இருண்ட வெள்ளம் ஏலேலோ பெரண்டோடும்

பெரண்டோடும் ஏலேலோ வெள்ளத்துல
பெண்களெல்லாம் ஏலேலோ நீர்குளிக்க

நீர்குளிச்சி ஏலேலோ நீராடி
நீல வர்ண ஏலேலோ பொட்டுவச்சி

ஊசி போல ஏலேலோ வாக்கெடுத்து
உன்னிதமா ஏலேலோ பொட்டுவச்சி

கத்திபோல ஏலேலோ வாக்கெடுத்து
கச்சிதமா ஏலேலோ பொட்டுவச்சி

வாளையின்னா ஏலேலோ வளவனூரு
வந்தெறங்கும் ஏலேலோ சின்னகட

கருப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி
காஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி

காஞ்சிபுரம் ஏலேலோ டேசனிலே
காசாட்டம் ஏலேலோ ஆடையிலே

காசநல்ல ஏலேலோ மறச்சானேதான்
கால்விலங்க ஏலேலோ போட்டானல்லே

சிவப்பு நல்ல ஏலேலோ சைக்கிள் வண்டி
செஞ்சிபுரம் ஏலேலோ போகும் வண்டி

செஞ்சிபுரம் ஏலேலோ டேசனிலே
சீட்டாட்டம் ஏலேலோ ஆடையிலே

சீட்டநல்ல ஏலேலோ மறச்சானேதான்
சிறுவெலங்க ஏலேலோ பொட்டானேதான்

வண்ண வண்ண ஏலேலோ கள்ஞ்செதுக்கி
வாடஞ்சம்பா ஏலேலோ கட்டடுக்கி

வாடஞ்சம்பா ஏலேலோ நெல்லளக்க
வல்லாளன ஏலேலோ காணோமேதான்

சின்ன சின்ன ஏலேலோ களஞ்செதுக்கி
சீவஞ்சம்பா ஏலேலோ கட்டடுக்கி

சீவஞ்சம்பா ஏலேலோ நெல்லளக்க
சீராளன ஏலேலோ காணோமேதான்

நீலேதான் ஏலேலோ வளையலிட்டு
நெல்லறுக்க ஏலேலோ போற பெண்ணே

நீலேதான் ஏலேலோ வளைய மின்ன
நெல்லறுப்பும் ஏலேலோ சோருதடி

கண்ணாடி ஏலேலோ வளையலிட்டு
கம்பறுக்க ஏலேலோ போற பெண்ணே

கண்ணடி ஏலேலோ வளைய மின்ன
கம்பறுப்பும் ஏலேலோ சோருதடி

பள்ளத்துல ஏலேலோ பயிரழகாம்
பறச்சி பொண்ணே ஏலேலோ நடையழகாம்

சினிமாகொட்டா ஏலேலோ தொறந்திருக்கு
சிவாஜி ஏலேலோ வந்திருக்கார்

சிவாஜி ஏலேலோ அவர்களுக்கு
சிவந்தியப்பூ ஏலேலோ தோரணமாம்
சீப்பி மேல ஏலேலோ ஊர்வலமாம்

அரிசி கட ஏலேலோ தொறந்திருக்கு
அண்ணாதொர ஏலேலோ வந்திருக்கார்

அண்ணதொர ஏலேலோ அவர்களுக்கு
அல்லிப்பூ ஏலேலோ தோரணமாம்
அர்ஜண்டா ஏலேலோ ஊர்கோலமாம்


எண்ண கட ஏலேலோ தொறந்திருக்கு
எம்ஜியாரு ஏலேலோ வந்திருக்கார்

எம்ஜியாரு ஏலேலோ அவர்களுக்கு
மல்லியப்பூ ஏலேலோ தோரணமாம்
மரகதமா ஏலேலோ ஊர்கோலமாம்

கள்ளுகட ஏலேலோ தொறந்திருக்கு
கருணநிதி ஏலேலோ வந்திருக்கார்

கருணாநிதி ஏலேலோ அவர்களுக்கு
கள்ளிப்பூ எலேலோ தொரணமாம்
கழுதமேல ஏலேலோ ஊர்கோலமாம்.

பாடியவர் : திருமதி. அம்புஜம் (60),கல்வி- இரண்டாம் வகுப்பு,சாதி- வண்ணர்,பிறந்த ஊர்- கூத்தக்குடி, விழுப்புரம் மா.வ.,சேகரித்த ஊர்- மருங்கூர், கடலூர் மா.வ.,நாள்- 24/10/1999,சேகரித்தமுறை-ஒலிப்பதிவு, சூழல் -செயற்கைச்சூழல்,பாடலைத் தகவலாள்ளர் கற்ற முறை - 12 வயதில் சகோதரியிடம் கற்றது.

சேகரித்தவர் - முனைவர் இரத்தின புகழேந்தி.
குறிப்பு : இப்பாடல் எளிய மக்களின் அரசியல் பார்வையையும் அது குறித்த அவர்களின் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறது. நாட்டுப்புறப்பாடல்களில் அரசியல் வெளிப்பாடு குறித்து ஆராய்பவர்களுக்கு இப்பாடல் உதவும்.



சனி, 19 டிசம்பர், 2009

ஒப்பாரி

கோசு பனி பேயும்
கோதாம்பு நெல் வெளையும்
குடுக்க எடம் இல்லண்ணு - இந்த
குழியிலயும் தள்ளுனாங்க - இந்த
குழிய உட்டு நீங்கி வர - எனக்கு
கோடி நாளு செல்லுதம்மா.

மாசி பனி பேயும்
மகிழம்பூ நெல் வெளையும்
மடிக்க எடம் இல்லாம- இந்த
மடுவுலயும் தள்ளுனாங்க - இந்த
மடுவ உட்டு நீங்கி வர - எனக்கொரு
மாமாங்கம் செல்லுதம்மா.

குறிப்பு: தனக்கு சரியான குடும்பத்தில் மணவாழ்க்கை அமையவில்லை என்கிற ஏக்கத்தை இந்த ஒப்பாரி வெளிப்படுத்துகிறது.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வயல்வெளிப் பாட்டு


ஊசி போல மப்பெறங்கி
உரல போல காலெறங்கி
காலெறங்கி பேஞ்ச மழ
காடு மேடெல்லந் தண்ணி வர

வெள்ளான உழுது வர
வேடர் மக்க பில்லரிக்க
கருப்பான உழுது வர
கள்ளர் மக்க பில்லரிக்க

மோடு வெட்டி முள் பொறுக்கி
முத்துச் சோளம் தென வெதைச்சி
காடு வெட்டி முள் பொறுக்கி
கம்மஞ்சோளம் தென வெதச்சி

சாச்சி சாச்சி வெதைக்கும் தென
சாக்கு தென மாளலியோ
கொட்டி கொட்டி வெதைக்கும் தென
கூட தென மாளலியா

ஓராந்தான் திங்களிலே
ஓரெலயாந் தின பயிரு
ஒரு கட்டு முழுங்கி வெட்டி
ஒரு பக்கம் தட்டி கட்டி.
............

பத்தாந்தான் திங்களிலே
பஞ்சந் திங்க பதமாச்சுதே.

தகவலாளர்: கல்யாணி, மருங்கூர்.
சேகரிப்பு: இரத்தின.புகழேந்தி.

வியாழன், 17 டிசம்பர், 2009

பாலூரணகரையில்

More than a Blog Aggregator
கார்கொடல் சொட்டவனம்
கார்மாங்குடிகளெல்லாம்
ஆறு போல வெள்ளம் வந்து
சேரு நெல்லு தள்ளி போவ
பட்டுசேல பொட்டி வண்டி
நெட்டி தள்ளி போவுது
வல்லியமுங் கீரனூரு
நல்ல மேலப்பாலூரு
பாலூரணகரையில்
வேண பொணம் போவுதடி
கெழக்க தொழூரானடி
கீழப்பால்ரு தேவங்குடி
குடியிருந்த கொடுமனூரு
தள்ளிபோனா மருங்கூரு
அக்கரையில் ஓட்டி மேடு
ஓட்டி மேடு பெருந்தொர
நாட்டினஞ் செறுவரப்பூரு
சின்ன ரெக்கணம் பெரிய ரெக்கணம்
தட்டானொட தம்மனூரு
மூணு லட்சம் காணி
சேதமாச்சி
சனம் பாவம்... பாவம்...

தகவலாளர்: ஆனந்தி,
சேகரித்தவர்: இரத்தின.புகழேந்தி.

குறிப்பு: மணிமுத்தாற்றுக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் அமைந்த அழகிய சிற்றூர் மருங்கூர். ஆறுகளில் வெள்ளம் வரும்போது ஆனந்தி பாட்டியின் இந்தப்பாடல் நினைவுக்கு வரும். 1993 ஆம் ஆண்டு சேகரித்த பாடல் இது.